முடிவுக்கு வருகிறது "கத்திரி" வெயில்
சென்னை:
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் வறுத்தெடுத்து வந்த அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்வருகிற சனிக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.
கோடை காலத்தின் போது சென்னை, வேலூர்,அரக்கோணம், சேலம், திருப்பத்தூர் போன்ற ஊர்களில் வெயில் கொளுத்துவதுவழக்கமானது தான். ஆனால் இந்த ஆண்டு வெயிலின் கொடுமை மிக கொடூரமாக இருந்தது.
கடந்த 4ம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வருகிற சனிக்கிழமையுடன் முடிவடைகிறது.இதையடுத்து வெயிலின் உக்கிரம் சனிக்கிழமைக்குப் பிறகு குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த கோடை காலத்தின் போது வெயில் கொளுத்தியதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகம் என்றும் வானிலை ஆராய்ச்சிநிலையம் தெரிவிக்கிறது.
சென்னையைப் பொருத்தவரை இந்த ஆண்டு அதிகபட்சமாக 106 டிகிரி வரை வெயில் பதிவாகியுள்ளது. வெயில் கொடுமையைத்தாங்க முடியாத மக்கள் கடற்கரைக்கும், கடலுக்கும் அருகில் இல்லாதவர்கள் பூங்காக்களுக்கும் சென்று காற்று வாங்கிவருகின்றனர்.
வெயிலின் கொடுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு கத்திரி முடியப் போகிறது என்ற செய்தி சற்றேகுளுமையைத் தரும் என்று நம்பலாம்.