For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அய்யர், ரகு ஜாமீன் மனு மீது 31ம் தேதி தீர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சுந்தரேச அய்யர் மற்றும் ரகு ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு வருகிற 31ம் தேதி அறிவிக்கப்படும் என சென்னைஉயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுந்தரேச அய்யரும், ரகுவும் குண்டர் சட்டத்தின் கீழும் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று கூறி சமீபத்தில் சென்னைஉயர்நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது.

இதைத் தொடர்ந்து சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சந்தரேச அய்யர், ரகு,கதிரவன், மீனாட்சி சுந்தரம், ரஜினி என்ற சின்னா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுக்கள் மீதுவிசாரணை நடந்து வந்தது.

நேற்று இறுதிக் கட்ட வாதம் நடந்தது. அதன் பின்னர் வருகிற 31ம் தேதிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி சர்தார் சக்கரியாஉசேன் அறிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X