For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னியாகுமரியில் மீண்டும் கடல் கொந்தளிப்பு

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகளில் நேற்று மாலை மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள்பீதியடைந்து அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றனர்.

கன்னியாகுமரியில் பல பகுதிகளில் கடந்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம்புகுந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பீதியைடந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

இந் நிலையில் கடந்த 3 நாட்களாக அமைதியாக இருந்த கடல் நேற்று மீண்டும் கொந்தளித்தது. இங்குள்ள நீரோடி, வல்லவிளை,சின்னத்துறை, பூத்துறை மற்றும் மார்த்தாண்டன் துறை ஆகிய பகுதிகளில் நேற்று மாலை கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

சுமார் 15 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பின. இப்பகுதியி மேடாக இருந்ததால் கடல் நீர் ஊருக்குள் புகவில்லை. ஆனாலும்மக்கள் பீதியடைந்து அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X