For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்றுடன் ஓய்கிறது கத்திரி வெயில்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக தமிழக மக்களை வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திர கத்திரி வெயில் இன்றுடன்முடிவடைகிறது.

இந்த ஆண்டு கோடை வெயில் மிகவும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய அன்று தமிழகம்முழுவதும் மழை பெய்தது. இதனால் மக்கள் கொஞ்சம் மகிழ்ந்தனர். ஆனால் அதற்குப் பிறகு வெயில் வழக்கம் போலசுட்டெரிக்கத் தொடங்கியது.

வேலூர், திருத்தணி, சென்னை உட்பட தமிழகத்தில் பல இடங்களில் வெயில் மக்களை வறுத்தெடுக்க தொடங்கியது. வேலூரில்அதிக பட்சமாக 109.4 டிகிரி வெயில் அடித்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சினர்.

கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக வாட்டி வதைத்த அக்னி நட்சத்திர கத்திரி வெயில் இன்றுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது.இதனால் இனிமேல் படிப்படியாக வெயில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X