For Daily Alerts
Just In
போலீஸ் நிலையத்தில் சுந்தரேச அய்யர் ஆஜர்
விழுப்புரம்:
சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து ஜாமீனில் விடுதலையாகியுள்ள சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், நீதிமன்ற நிபந்தனைப்படி வியாழக்கிழமை காலையும்,மாலையும் விழுப்புரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.
இதையடுத்து வியாழக்கிழமை காலை 10மணிக்கு டவுன் காவல் நிலையம் வந்த அய்யர் அங்கு சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகி கையெழுத்துப்போட்டார். பின்னர் மாலையும் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.
அய்யர் காவல் நிலையம் வரும்போது கூடவே ஏராளமான பாஜகவினரும் உடன் வந்தனர்.
Comments
Story first published: Thursday, June 2, 2005, 5:30 [IST]