For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் ஒளிபரப்பு நிலையம் இல்லை: சன் டிவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இலங்கையில் அடையாளம் தெரியாத நபர்களால் குண்டு வீசித் தாக்கப்பட்டது சன் டிவி அலுவலகம் ஒளிபரப்பு நிலையம் அல்ல என சன் டிவி நிர்வாகம்தெரிவித்துள்ளது.

இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள சன் டிவியின் மறு ஒளிபரப்பு நிலையம் அடையாளம் தெரியாத நபர்களால், வியாழக்கிழமை அதிகாலை குண்டு வீசித்தாக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. இந்த சம்பவத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ஒளிபரப்பு உபகரணங்கள் சேதமடைந்ததது. டெலோ அமைப்பினர் இந்த மறுஒளிபரப்பு நிலையத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சன் டிவி நிர்வாகம் இச் செய்தியை மறுத்துள்ளது. இதுதொடர்பாக சன் டிவி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வவுனியா பகுதியில்சன் டிவி மறு ஒளிபரப்பு நிலையம் குண்டு வீசித் தகர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சன் டிவி நிறுவனத்துக்கு இலங்கையில் கிளை அலுவலகமோ, ஒளிபரப்பு கூடமோ எதுவும் கிடையாது. மேலும், சன் டிவிக்கு சொந்தமான மறு ஒளிபரப்பு நிலையமும்அங்கு இல்லை.

வவுனியால் தாக்கப்பட்ட மறு ஒளிபரப்பு நிலையத்திற்கும், சன் டிவி நிறுவனத்துக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X