புதிய வாக்காளர் பட்டியல் கோருகிறது திமுக
சென்னை:
வாக்காளர் பெயர் சேர்ப்பில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்சென்னையில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியலில் அதிமுகவினர் லட்சக்கணக்கான போலி வாக்காளர்களை சேர்த்து வருவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள்புகார் கூறி வருகின்றன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாகவும் திமுக முடிவுசெய்துள்ளது.
இதில் அதிமுக சார்பில் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் ஜெயக்குமார், திமுக சார்பில் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, காங்கிரஸ்சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஞானதேசிகன், பாமக சார்பில் ஜி.கே.மணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வாக்காளர்கள் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்து அனைத்துக் கட்சிகளும் பல்வேறுயோசனைகளைத் தெரிவித்தன. கூட்டத்திற்குப் பின்னர் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், கடைசி நாளில்லட்சக்கணக்கான மனுக்கள் குவிந்ததை பெரிய தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. கடைசி நாள் வரை எத்தனை மனுக்கள்வேண்டுமானாலும் கொடுக்கப்படலாம்.
கொடுக்கப்படும் மனுக்கள் அனைத்தும் உரிய பரிசீலனைக்குப் பிறகே அவற்றை சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவுஎடுக்கப்படும்.