ஹவாலா பணத்தையும் கொள்ளையடித்த மதுரை "திருட்டு போலீஸ்
சென்னை:
மதுரை நகைக் கடை ஊழியர்களிடமிருந்து ரூ. 4 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயன்று கைது செய்யப்பட்டுள்ளமதுரையைச் சேர்ந்த 3 போலீஸாருக்கும், தென் மாவட்டங்களில் நடந்த பல ஹவாலா பண கொள்ளையிலும் தொடர்புஇருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
அப்போது அந்த வழியாக வந்த போலீஸாரிடம் வழிப்பறி செய்த மதுரை போலீஸ்காரர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களிடம்நடத்திய விசாரணையில் கடந்த 3 வருடமாகவே இதுபோல கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக அவர்கள்தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில், ஹவாலா மூலம் கொண்டு வரப்படும் பணத்தையும்இவர்கள் கொள்ளை அடித்து வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த வகையில் பல கோடி ரூபாய் பணத்தை இந்தக் கும்பல் கொள்ளை அடித்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. இதுதொடர்பாகவிசாரிக்க மதுரையிலிருந்து ஒரு தனிப்படை சென்னைக்கு வருகிறது.
இதற்கிடையே 3 போலீஸ்காரர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.