மேலும் 2 நகைக் கொள்ளையில் திருட்டு போலீஸாருக்கு தொடர்பு!
சென்னை:
சென்னை மற்றும் திருச்சியில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த சம்பவங்களிலும் மதுரையைச் சேர்ந்த 3திருட்டுப் போலீஸாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த வழக்குகளிலும் அவர்கள் கைதுசெய்யப்படவுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை பாஸ்கரன், பன்னீர் செல்வம் ஆகிய இரு போலீஸ்காரர்கள் உள்பட 7 பேரை காவலில் எடுத்த சென்னையானை கவுணி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
மீனாட்சி சுந்தரம் என்ற மற்றொரு காவலரை புதன்கிழமை மாலை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 10 நாட்கள்அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர். ஆனால் அவரை 6 நாட்கள் மட்டும் போலீஸ் காவலில் வைத்துவிசாரிக்க மாஜிஸ்திரேட் அரிதாஸ் அனுமதித்தார்.
இந் நிலையில் மேலும் 2 கொள்ளை சம்பவங்களிலும் 3 போலீஸாருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்தஆண்டு மார்ச் மாதம் கோவையைச் சேர்ந்த நகைக் கடை வியாபாரி பாலாஜி என்பவர் சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ளவிடுதியில் தங்கியிருந்தார்.
கோவை திரும்புவதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் கிளம்பினார்.
அப்போது 4 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகளை பறித்துக்கொண்டு தப்பிவிட்டது. இதுதொடர்பாக இதே யானை கவுணி காவல் நிலையத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இதேபோல 2004ம் ஆண்டு திருச்சி ரயில் நிலையம் அருகே கண்ணன் என்ற நகைக் கடை ஊழியரிடம் (மதுரையைச்சேர்ந்தவர்) இரண்டே கால் கிலோ தங்க நகைகள் கொள்ளைடிக்கப்பட்டன. இந்த இரு சம்பவங்களிலும் திருடப்பட்ட நகைகள்மற்றும் தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ. 20 லட்சமாகும்.
கோவை நகைக் கடை அதிபர் பாலாஜி, மீனாட்சி சுந்தரத்தின் புகைப்படத்தைப் பார்த்து, இவர்தான் தன்னிடம் தங்கக்கட்டிகளைப் பறித்துக் கொண்டு ஓடியவர் என அடையாளம் காட்டியுள்ளார். மேலும் திருச்சியிலும் இவர்கள் மீது வழக்குப்பதிவாகியுள்ளது.
இதையடுத்து இந்த இரு சம்பவங்களிலும் 3 போலீஸாரும் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications