ஆங்கிலத்தில் அசத்திய வேலு!
விழுப்புரம்:
தேமிழுக்காக ஒரு பக்கம் பாமக போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு,விழுப்புரத்தில் நடந்த ரயில்வே நிகழ்ச்சியில் சுத்தமான ஆங்கிலத்தில் பேசி, அதைக் கேட்ட செய்தியாளர்களையும், பாமகவினரையும் குழப்பி விட்டார்.
அப்படி சொல்வதோடு மட்டுமல்லாமல் பாமக நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்தில் யாராவது பேசினால், அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் நூறு ரூபாய் அபாரதமும்விதித்து வருகிறார்.
இந் நிலையில் ராமதாஸ் கூற்றுக்கு எதிர் மாறாக விழுப்புரம் ரயில் நிலைய நிகழ்ச்சியில் அக்கட்சியைச் சேர்ந்த ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு நடந்து கொண்டதுபாமகவினரிடையே பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி விட்டது.
மதுரையிலிருந்து விழுப்புரம் வரையிலான புதிய பாசஞ்சர் ரயில் மதுரையில் நேற்று இரவு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயிலை விழுப்புரத்தில் வரவேற்பதற்காகரயில் நிலையத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வேலு, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய வேலுவின் உரையில், முக்கால்வாசி ஆங்கில வார்த்தைகளே இருந்தன. அவ்வப்போது தமிழில் அவர் பேசினார். அவர் பேசியதில்முக்கால்வாசி விஷயங்கள் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்குப் புரியவில்லை.
அதேபோல செய்தியாளர்களிடம் அவர் பேசுகையிலும் ஆங்கிலத்திற்குத் தாவினார். தமிழில் பேசத் தொடங்கிய அவர் அப்படியே ஆங்கிலத்துக்கு மாறினார். திடீரெனதமிழ் வார்த்தைகளை கூறி விட்டு மீண்டும் ஆங்கிலத்திலேயே தொடர்ந்து பேசினார். இப்படி ஆங்கிலம் அவ்வப்போது தமிழுமாக மாறி மாறி இரு மொழிகளில் அவர்அளித்த பேட்டியால் செய்தியாளர்களும், பாமகவினரும் குழம்பிப் போய் விட்டனர்.
இத்தனைக்கும் கூடியிருந்த செய்தியாளர்கள் அனைவருமே சுத்தமான தமிழர்கள், உள்ளூர்க்காரர்கள். அங்கு கூடியிருந்தோரும் தமிழ்நாட்டவர்கள். எனவேஆங்கிலத்தில் பேச வேண்டிய அவசியமே இல்லாத நிலையில் வேலு இப்படி ஆங்கிலத்தில் போட்டுத் தாக்கியது கூடியிருந்தவர்களை குழப்பி விட்டது.
அதை விட பாமகவினர் தான் அதிகம் நெளிந்தனர். நமது தலைவர் ஆங்கிலத்தை வேண்டாம் என்கிறார். ஆனால் அமைச்சரோ, முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயேபேசுகிறார். இதைப் பார்த்தால் எதிர்க்கட்சிக்காரர்கள் நம்மை கேலி செய்ய மாட்டார்களா என்று தனியாக புலம்பித் தள்ளினார்கள்.
மத்திய அமைச்சர் இளங்கோவன் சில நாட்களுக்கு முன்பு தான் பாமகவையும், தமிழ் பாதுகாப்பு இயக்கத்தையும் நக்கலடித்துப் பேசினார். அவர் பேச்சுக்கு ஆதரவுதெரிவிப்பது போல வேலு நடந்து கொண்டது பாமகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.