For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேது தொடக்க விழா: காங்கிரஸுக்கு ராசியான மஸ்தான்பட்டி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா நடைபெறப் போகும் மதுரை மஸ்தான்பட்டி, காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் ராசியானஇடமாக கருதப்படுகிறது.

சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழாவை மதுரையில் நடத்த முடிவாகியுள்ளது. இதுதொடர்பாக மதுரை வந்த மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, மதுரை வண்டியூர் அருகே உள்ள மஸ்தான்பட்டி கிராமத்திற்கு வந்து தொடக்க விழாவைநடத்துவதற்கான இடத்தைப் பார்வையிட்டு இறுதி செய்தார்.

இதன் மூலம், மஸ்தான்பட்டி கிராமம் புதிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்த கிராமம், காங்கிரஸ் கட்சிக்கு ராசியான இடமாககருதப்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டு மூப்பனாரால் உருவாக்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன்இணைந்தது. இது தொடர்பான இணைப்பு மாநாடு இதே மஸ்தான்பட்டியில் தான் சோனியா முன்னிலையில் நடந்தது.

காங்கிரஸுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்த பிறகு காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் புதிய செல்வாக்கைப் பெற்றதாக காங்கிரஸ்தரப்பில் கருதப்படுகிறது. திமுகவுடன் கூட்டணி, அதைத் தொடர்ந்து 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் கிடைத்த அமோக வெற்றிஉள்ளிட்ட பல்வேறு சாதகமான அம்சங்களை நினைத்துப் பார்க்கும் காங்கிரஸார்,

மஸ்தான்பட்டி விழாவுக்குப் பிறகு தான் காங்கிரஸ் கட்சிக்கு பல நல்ல விஷயங்கள் நடந்ததாக கூறுகிறார்கள்.

எனவே மதுரையில் நடக்கப் போகும் சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவை அதே மஸ்தான்பட்டியில் நடத்த வேண்டும் என்றுஅவர்கள் டி.ஆர்.பாலுவிடம் கோரிக்கை விடுத்தனர். அதை பாலுவும் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்தே மஸ்தான்பட்டியைஅவர் இறுதி செய்ததாக கூறப்படுகிறது.

விரைவில் சட்டசபைத் தேர்தல் வரப் போகும் நிலையில், அடுத்த மாதம் நடைபெறப் போகும் சேது சமுத்திரத் திட்ட தொடக்கவிழாவுக்கு சோனியா காந்தி வருவதன் மூலம் எதிர் வருகிற சட்டசபைத் தேர்தலிலும்மஸ்தான்பட்டி ராசி எதிரொலிக்கும் என்றசந்தோஷமான எதிர்பார்ப்பு காங்கிரஸார் மற்றும் திமுகவினர் மத்தியில் நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X