ஜ. மனுவை விசாரிக்க வருமான வரி கமிஷனுக்கு தடை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிப்பதற்கு வருமான வரி தீர்வாணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதையடுத்து ஜெயலலிதா கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், ஆதாரங்கள் அடிப்படையிலும், ஜெயலலிதாவின்வருமானம் ரூ. 2.88 கோடி என வருமான வரித்துறை முடிவு செய்தது.
ஆனால் வருமான வரித்துறையின் இந்த முடிவை எதிர்த்து ஜெயலலிதா, வருமான வரி தீர்வாணையத்தில் மனு செய்தார். இந்தமனுவை வருமான வரி தீர்வாணையம் விசாரணைக்கு ஏற்றது.
ஆனால் தீர்வாணையத்தின் முடிவை எதிர்த்த வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது.தீர்வாணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கோரியிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ரவிராஜ பாண்டியன் விசாரித்து தீர்வாணையம், ஜெயலலிதாவின் மனுவை விசாரிப்பதற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications