புழுங்க வைத்த அந்நியன்; ரசிகர்கள் கொந்தளிப்பு
சென்னை:
சென்னையில் அந்நியன் திரையிடப்பட்ட திரையரங்கில், குளிர்சாதன இயந்திரம் (ஏ.சி.) செயல்படாததால், ரசிகர்கள் வியர்வைமழையில் நனைந்தனர். கொந்தளித்துப் போன ரசிகர்கள் போராட்டத்தில் குதித்ததால் திரையரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் படம் திட்டமிட்டபடி 10 மணிக்குத் தொடங்கவில்லை. மாறாக 11.30 மணிக்குத்தான் படம் தொடங்கியது. அதிக விலைவைத்து விற்கப்பட்ட டிக்கெட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஏ.சி. போடப்படாமல் மின் விசிறிகளை ஓட விட்டிருந்தனர். ஏற்கனவே பகல் முழுவதும் 105 டிகிரி வெயிலில் காய்ந்துகொதித்துப் போய் ஏ.சிக்காக உள்ளே வந்த ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஏன் ஏ.சி போடவில்லை என்றுதிரையரங்க ஊழியர்களிடம் ரசிகர்கள் கேட்க, ஒர்க் பண்ணல அதனால போடலை என்ற அலட்சியமான பதில் வந்தது.
இதனால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்களில் சிலர் அருகே உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்குப் போன் செய்து,போலீஸாரை வரவழைத்தனர். அவர்களை முற்றுகையிட்ட ரசிகர்கள், ஏகப்பட்ட பணத்தை டிக்கெட் என்ற பெயரில் எங்களிடம்பிடுங்குகிறார்கள். ஆனால் உள்ளே ஏ.சி. போடவில்லை. கேட்டால் வேலை செய்யவில்லை என்று அலட்சியமாக கூறுகிறார்கள்.
ஏ.சி போடுவதாக கூறித்தானே இத்தனை பணத்தை வாங்குகிறார்கள். இப்படிப் பதில் கூறினால் எப்படி, ஏ.சி போடாவிட்டால்நடப்பதே வேறு என்றனர்.
இதையடுத்து திரையரங்க நிர்வாகிகளிடம் பேசுவதாக போலீஸார் கூறினர். ஆனால் ரசிகர்களை திரையரங்குக்குள் அனுப்பிவைத்து விட்டு அவர்கள் கிளம்பிப் போய் விட்டனா.
இதனால், திரையரங்க ஊழியர்களும் ரசிகர்களின் வேதனையைக் கண்டு கொள்ளாமல், கடைசி வரை ஏ.சி. போடாமல் படத்தைஓட்டி டித்தனர்.
புதிய படங்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் இஷ்டம் போல டிக்கெட் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று அரசுஅனுமதித்துள்ளது. மேலும் திரையரங்க பராமரிப்புக்காகவும் ரசிகர்களிடமிருந்தே பணத்தை பறிக்கிறார்கள் திரையரங்கஉரிமையாளர்கள்.
புதிய படங்கள் திரையிடப்படும்போது, திரையரங்க கவுண்டர்களிலேயே அதிக அளவுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள்.வழக்கமாக 20 ரூபாய்க்கு டிக்கெட் என்றால் புதிய படங்களின்போது அது 50 ரூபாயாக உயர்ந்து விடுகிறது.
இப்படி, ரசிகர்களின் வயிற்றில் அடித்து காசு பார்த்துக் கொண்டிருக்கும் திரையரங்குகள் இருக்கும் வரை தமிழ் சினிமாவுக்கு அரசுஎத்தனை சலுகைகளை அள்ளிக் கொடுத்தாலும் அது தேறவே தேறாது!.