பெரிய மனிதர்களின் இடையூறுகள்: ஜெ. சாடல்
திருநெல்வேலி:
தமிழக வளர்ச்சிக்காக தான் பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலபெரிய மனிதர்கள் தனக்கு இடையூறு செய்வதாக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக சாடியுள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லைசென்றார். அங்கு அவருக்கு 21 யானைகள் புடை சூழ, செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து விழா நடந்த பொருட்காட்சி மைதானத்திற்கு ஜெயலலிதா அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் அங்கு நடந்த விழாவில் வ.உ.சி.மணி மண்டபத்தைத் திறந்து வைத்தார். அதன் பின்னர், ரூ. 116.58கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் ரூ. 107.94 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படவுள்ள 2203 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.இது தவிர 6988 பேருக்கு ரூ. 3.87 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
பெரிய மனிதர்களின் இடையூறு:
பின்னர் நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில், தமிழக வளர்ச்சிக்காக நான் பல திட்டங்களை அமல்படுத்திவருகிறேன், அறிவித்தும் வருகிறேன். ஆனால் இவற்றையெல்லாம் தமிழகத்தில் உள்ள சில ‘பெரிய’மனிதர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
எனது பணிகளுக்கும், தமிழக நலனுக்காக நான் பாடுபடுவதற்கும் இடையூறுகள், சிக்கல்கள், தடைகளைஏற்படுத்தி அவர்கள் அதில் இன்பம் கண்டு வருகிறார்கள். ஆனால் மக்கள் எனது பணியை உணர்ந்துள்ளனர்.எனவே இந்த பெரிய மனிதர்களின் வேலை மக்களிடம் பலிக்காது.
நெல்லை மாவட்டத்தில் கடலோரத்தில் உள்ள 11 கிராமங்களில் ரூ. 27 கோடியில் கடல் தடுப்பு சுவர்களை கட்டதிட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் சுனாமி போன்ற இயற்கைச் சீரழிவுகளிலிருந்து இந்தகிராமங்கள் காப்பாற்றப்படும் என்றார் ஜெயலலிதா.
நிகழ்ச்சியின் போது வ.உ.சியின் பேரன் குமாருக்கு அரசு வேலை வழங்குவதற்கான உத்தரவை ஜெயலலிதாஅவரிடம் வழங்கினார். விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அதுல் ஆனந்த், அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.பி.தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications