புலிகளுடன் ஒப்பந்தம்: சந்திரிகா அரசு மீது வழக்கு- ஜேவிபி அறிவிப்பு
கொழும்பு:
சுனாமி நிவாரணப் பணிகளில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால்சந்திரிகா அரக்கு எதிராக வழக்கு தொடர ஜேவிபி கட்சி தீர்மானித்துள்ளது.
இலங்கையில் சுனாமி பாதித்த தமிழர் பகுதிகளில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளஇலங்கை அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமீபத்தில்ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதன் படி பல்வேறு நாடுகளில் இருந்து கிடைத்த சுமார் 1,300 கோடி ரூபாயை விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசுபகிர்ந்து கொள்ளும்.
விடுதலைப் புலிகளுடனான இந்த ஒப்பந்தத்தை தொடக்கம் முதலே ஜேவிபி கட்சி எதிர்த்து வந்தது. இதனால் இலங்கைஅரசுக்கு அளித்து வந்த ஆதரவை அக்கட்சி வாபஸ் பெற்றது. இதனால் இலங்கை அரசு மைனாரிட்டி அரசாக நீடிக்கிறது.
இந் நிலையில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக ஜேவிபி கட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக ஜேவிபி கட்சியின் தலைவர் கோமவன்சா கூறுகையில், விடுதலைப் புலிகளுடனான ஒப்பந்தத்தை எதிர்த்துநாங்கள் இன்று வழக்கு தொடரவுள்ளோம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை மக்களுக்கு அதிபர் சந்திரிகா துரோகம் செய்து விட்டார். இந்திய அரசையும் சந்திரிகாஏமாற்றி இருக்கிறார் என்றார்.