நுழைவுத் தேர்வு ரத்துக்கு அவசர சட்டம் கோரி நாளை பாமக போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நுழைவுத் தேர்வு ரத்தை அமலாக்க அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் இதை வலியுறுத்தி மாணவர்களுடன்ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், நுழைவுத் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை சென்னைஉயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மகிழ்ச்சியடைந்திருந்த கிராமப்புற மாணவர்கள்இப்போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வசதியும், வாய்ப்பும் இருப்பவர்கள் சட்டத்திற்குள் நுழைந்து தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்கின்றனர்.

நுழைவுத் தேர்வை ரத்து செய்தது அரசின் கொள்கை முடிவு. கொள்கை முடிவு சட்டமாகத் தான் வெளிவந்திருக்க வேண்டும்.ஆனால் அதிமுக அரசு இதற்கு ஒரு சாதாரண அரசு உத்தரவை பிறப்பித்தது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதே இதனை சுட்டிக் காட்டி, அவசர சட்டமாக பிறப்பிக் வேண்டும் என்றும், சட்டசபையைகூட்டி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் நான் வற்புறுத்தினேன். ஆனால் அரசு அதை கண்டு கொள்ளவில்லை. அப்படிசெய்திருந்தால் இன்றைக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்காது.

இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. நுழைவுத் தேர்வை ரத்து செய்த அரசின் கொள்கை முடிவுக்கு மீண்டும் உயிர்கொடுக்க உடனடியாக ஒரு அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி பாமக மாணவர்கள் நாளை (28ம் தேதி) சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்குநான் தலைமை தாங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+