சட்டசபையைக் கூட்டக் கோரி பாமக மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபையைக் கூட்டக் கோரி மனு கொடுக்க தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முயன்ற பாமக எம்.எல்.ஏக்கள் 18பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் சட்டசபை செயலாளரிடம் அவர்கள் மனு கொடுத்து விட்டுச் சென்றனர்.
இக் கோரிக்கையை வலியுறுத்தி பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பாமக எம்.எல்.ஏக்கள் சட்டசபை செயலாளரிடம்மனு கொடுக்க கோட்டைக்கு வந்தனர். ஆனால் அவர்களை போலீஸார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஜி.கே.மணி உள்ளிட்டோருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. சட்டசபை செயலாளர் இங்குவந்து மனுவைப் பெற வேண்டும். இல்லாவிட்டால் போக மாட்டோம் என்று மணி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதையடுத்து சட்டசபை செயலாளர் ராஜாராமன் அங்கு வந்து பாமகவினரிடமிருந்து மனுவைப் பெற்றுக் கொண்டார். அதன்பிறகு பாமகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications