இன்னொரு வழக்கிலும் ஆதி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:
கோடிக்கணக்கில் பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆதிகேசவன் மற்றும் அவரது கூட்டாளி ஜெயவீரன் ஆகியோர் மேலும் ஒரு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான பேரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக ஆதிகேசவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது மகன் சாரதி, முக்கியக் கூட்டாளியான ஜெயவீரன் உள்ளிட்டோரும் இதுவரைகைது செய்யப்பட்டுள்ளனர். ஆதி கேசவன் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் மேலும் ஒரு மோசடி வழக்கிலும் ஆதி கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லையைச் சேர்ந்ததொழிலதிபர் விஜயன் என்பவர் ரூ. 2 கோடி கடன் கேட்டு அதற்காக ரூ. 6 லட்சம் பணத்தை ஆதியிடம்கொடுத்தார். அதற்குப் பதிலாக ரூ. 2 கோடிக்கான காசோலையை ஆதி கேசவன் கொடுத்தார்.

ஆனால் ஆதி கேசவனின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் 2 கோடிக்கான காசோலை திரும்பி வந்துவிட்டது.

இதுதொடர்பாக விஜயன் கொடுத்த புகாரின் பேரில் அந்த வழக்கில் தற்போது ஆதி கேசவன், ஜெயவீரன்ஆகியோரை போலீஸார் கைது செய்து நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாள் காவலில்வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+