234 தொகுதியிலும் போட்டி: ஜெகத்ரட்சகன்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
வருகிற சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதியிலும் ஜனநாயக முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்று அக்கட்சியின்நிறுவனர் ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எங்களது கட்சி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. குறுகிய காலத்தில் அதிகஉறுப்பினர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளோம்.
வருகிற சட்டசபைத் தேர்தலில் எங்களது பலத்தைக் கொண்டு, 234 தொகுதியிலும் போட்டியிடுவோம். கூட்டணி அமைத்துப்போட்டியிடவும் தயாராக உள்ளோம். தேர்தல் நேரத்தில் அதுகுறித்து முடிவு எடுப்போம்.
கங்கை-காவிரி இணைப்பு என்பதெல்லாம் சாத்தியமில்லாத விஷயம். மகாநதியை காவிரியுடன் இணைத்தால் தான்தமிழகத்திற்கு பலன் கிடைக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications