மணல் கொள்ளை: ஆளுனரிடம் பாமக மனு
சென்னை:
தமிழகத்தில் மணல் கொள்ளையில் ஈடுபடும் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுனர் சுர்ஜித் சிங்பர்னாலாவிடம் பாமக மனு கொடுத்துள்ளது.
பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான பாமக குழு ஆளுனர் பர்னாலாவை இன்று சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தது.பின்னர் வெளியே வந்த மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் அரசின் துணையுடன் ஆளுங்கட்சியினர் மணல்கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆளுங்கட்சியும், அரசும் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்கள். அரசுக்குமணல் விற்பனை மூலம் வர வேண்டிய வருவாயை அரசே திருடி வருகிறது.
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுனரிடம் கோரிக்கை வைத்தோம். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுனர் உறுதி அளித்துள்ளார் என்றார் மணி.
பாமக குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, எம்.பி. பொன்னுச்சாமி உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications