முறைகேடு: 55 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் முறைகேடுகளில் ஈடுபட்ட 55 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அரசு மதுக்கடைகளில் (டாஸ்மாக்) பணிபுரியும் சில ஊழியர்கள் பார் நடத்தும் தனி நபர்களுடன் சேர்ந்து கொண்டுமுறைகேடுகளில் ஈடுபடுவதாக ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக மதுவில் தண்ணீர் சேர்த்து விற்பதாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் மதுவில்தண்ணீர் கலந்து விற்பது உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஊழியர்கள் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கையும் களவுமாகப் பிடிபட்ட 55 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டது. இவர்கள் மீதுபோலீஸில் புகார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. சென்னையில் மட்டும் 25 ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications