ஜெவை புகழ்ந்த காங் எம்எல்ஏவுக்கு அடி, உதை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி பேசி காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.விநாயகமூர்த்தி, கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
இவர் மூப்பனாரின் மிக நெருங்கிய நண்பராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில், சென்னையின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்தது உள்ளிட்ட பல்வேறு செயல்களுக்காக முதல்வர்ஜெயலலிதாவை அவர் புகழ்ந்து பேசினார். இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
விநாயகமூர்த்திக்கு எதிராக ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் அணி திரண்டனர். அவர் மீது கட்சி மேலிடம் கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். வட சென்னை காங்கிரஸ் கட்சியோ, விநாயகமூர்த்தியை புறக்கணிக்கும்போராட்டத்தை அறிவித்தது.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் விநாயகமூர்த்தி வியாழக்கிழமை கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனுக்கு வருகை தந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தொண்டர்கள் (பெரும்பாலும் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள்)விநாயகமூர்த்தியைப் பார்த்ததும் ஆத்திரமடைந்து அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.
அவரை ஒருமையிலும் கெட்ட வார்த்தைகளாலும் திட்டிய காங்கிரசார், ஜெயலலிதாவிடம் விலைபோன விநாயகமூர்த்தியேஎன்று கூறிக் கொண்டே ஆவேசமாக அடிக்கத் தொடங்கினர்.
வயதில் முதியவரான அவருக்கு முகத்திலும் முதுகிலும் சரமாரியாக குத்து விழுந்தது. தொண்டர்கள் அவரை சுற்றி வளைத்துஅடித்தனர். அய்யோ அம்மா என அலறிய விநாயகமூர்த்தியை சில தொண்டர்கள், வாசன் ஆதரவாளர்களிடமிருந்து மீட்டுபாதுகாப்பாக உள்ளே அழைத்துச் சென்றனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் சத்தியமூர்த்தி பவனுக்கு விரைந்து வந்தனர். இத் தாக்குதல் தொடர்பாககாங்கிரசார் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசிய மூத்த எம்எல்ஏ ஒருவருக்கு தொண்டர்களே தர்ம அடியைக் கொடுத்தது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications