போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவோம்: விடுதலைப் புலிகள் எச்சரிக்கை
கொழும்பு:
பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளாவிட்டால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவோம் என்று இலங்கைஅரசுக்கு விடுதலைப்புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், கிளிநொச்சியிலிருந்து மட்டக்களப்புக்கும், திரிகோணமலைக்கும் புலிகள் பயணம் செய்யும்போது அவர்களோடுபாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய வீரர்களும் உடன் செல்வர்.
குறிப்பிட்ட அளவில் தான் வீரர்கள் செல்லவேண்டும் என்று இலங்கை அரசு சில நிபந்தனைகளையும் விதித்தது. குறிப்பிட்டநபர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு புலிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதுகுறித்து இலங்கை அரசுக்கு புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுசெயலர் தமிழ்ச் செல்வன் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அரசின் யோசனைகளை நாங்கள் முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளமுடியாது.
எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிராகரிக்கிறோம். புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் பயணத்திலோஅல்லது பாதுகாப்பு அம்சங்களிலோ இலங்கை ராணுவத்தினரின் தலையீட்டை ஏற்கமுடியாது.
புலிகளின் பயணத்தில் ராணுவத்தினர் தடையோ, தாமதமோ ஏற்படுத்தினால் நாங்களும் திரும்ப பதிலடி தரும் நிலைக்குதள்ளப்படுவோம். இதனால் தற்போது நீடித்துவரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம்எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, புலிகளின் பயணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை உடனே நீக்க வேண்டும்.காலதாமதமின்றி இதைச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சுனாமியால் பாதிக்கப்புக்குள்ளான வடகிழக்கு பகுதியில் 6 மாவட்டங்களில் நிவாரண உதவிகளை இலங்கைஅரசும், விடுதலைப் புலிகளும் இணைந்து வழங்குவதை நிறுத்தி வைக்க இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications