For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயேந்திரர் தொடங்கிய புதிய பேரவை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சங்கர மட பக்தர்கள் உருவாக்கியுள்ள காஞ்சி காமகோடி பக்தர்கள் பேரவை என்ற புதிய அமைப்பை சென்னையில் நடந்தநிகழ்ச்சியில் ஜெயேந்திரர் தொடங்கி வைத்தார்.

சென்னை தியாகராய நகரில் ஜெயேந்திரரின் 71வது பிறந்த நாள் விழா, காஞ்சி காமகோடி பக்தர்கள் பேரவை தொடக்க விழாஉள்பட முப்பெரும் விழா நடந்தது.

இதில் காஞ்சி காமகோடி பேரவையை தொடங்கி வைத்து முதல் உறுப்பினர் அட்டையை பாஜக எம்.எல்.ஏ. எச்.ராஜாவிடம்ஜெயேந்திரர் வழங்கினார்.

பின்னர் ஜெயேந்திரர் பேசுகையில், சங்கர மட பக்தர்கள் ஒற்றுமையாக செயல்பட இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பின் மூலம் பல நல்ல பணிகளை செய்யவிருக்கிறார்கள். அனைத்து பக்தர்களும் ஈடுபாட்டுடன் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

ராஜா பேசுகையில், முதலில் கோவில்களிலிருந்து அரசு வெளியேற வேண்டும். ராமேஸ்வரத்தில் ஜெயேந்திரருக்கு நடந்தஅவமரியாதை இந்து மதத்திற்கு இழைக்கப்பட்ட அவமரியாதை.

அது இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. இனிமேல் இதுபோல ஏதாவது ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்தால்இந்தியாவையே நாம் ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்றார் ராஜா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X