தமிழகத்தில் மழை: மேட்டூருக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்துஅதிகரித்துள்ளது.

கேரளாவின் வயநாடு மற்றும் கர்நாடகத்தின் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்துவந்ததால் கபிணி அணை நிரம்பியது.

இதனால் அணையைக் காக்க உபரி நீரை தமிழகத்திற்குத் திறந்து விட்டது கர்நாடகம். இந்த நீர் மேட்டூர் அணையை அடைந்துவந்தது.

இந் நிலையில் மழை குறைந்ததால் கடந்த சில நாட்களாக கபிணியில் மீண்டும் நீரை சேமிக்க ஆரம்பித்தது கர்நாடகம்.அதிலிருந்து திறந்து விடப்பட்டு வந்த நீர் வெகுவாக குறைக்கப்பட்டு வினாடிக்கு 5,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டது.இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்தும் குறைந்தது.

இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தின் சேலம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக நல்ல மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.

திங்கள்கிழமை மாலை வரை வினாடிக்கு 8,765 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலை மாறி இன்று காலை முதல் வினாடிக்கு13,573 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

இப்போது அணையின் நீர் மட்டம் 70 அடியாக உள்ளது. சேலம் மாவட்ட குடிநீர்த் தேவைக்காக அணையிலிருந்து 900 கன அடிநீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளது.

கேரளாவின் வய நாடு மற்றும் கர்நாடகத்தின் மேற்குப் பகுதிகளில் அடுத்த வாரம் பருவ மழை தீவிரமடையும் என்று வானிலைஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த வாரம் முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+