For Quick Alerts
For Daily Alerts
Just In
பிஇ: நீதிபதிகள் குழுவை எதிர்த்து பாமக ஆர்ப்பாட்டம்
சென்னை:
தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு மற்றும் கட்டண விகிதங்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசால்அமைக்கப்பட்ட நீதிபதி ராமன் கமிட்டி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் கமிட்டி ஆகியவற்றை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சிசார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த இரு கமிட்டிகளும் மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரே இன்று காலை கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இரு கமிட்டிகளையும் உடனடியாக கலைக்க வேண்டும், நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய அரசு உடனடி நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.
Comments
Story first published: Tuesday, July 19, 2005, 5:30 [IST]