பாக். தீவிரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சிக்கலாம்: பிரதமர் எச்சரிக்கை
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகவும், இதனால் அந் நாட்டு அணுஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போக வாய்ப்பிருப்பதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார்.
முன்னதாக சிஎன்என் தொலைக்காட்சிக்கு மன்மோகன் சிங் அளித்த சிறப்புப் பேட்டியில்,
ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானில் வலுவாக வேரூன்றியுள்ளது. அந் நாட்டில் எந்தநேரத்திலும் தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது.
அதிபர் பர்வேஸ் முஷாரப் பதவி இழக்கும் நிலையில் அந் நாட்டு அணு ஆயுதங்கள் குறித்து நாம் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஜிகாதி தீவிரவாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலையில் அவர்களது கைக்கு அணு ஆயுதங்கள் போகலாம்.
அப்படிப்பட்ட ஒரு நிலை வரக் கூடாது என பிரார்த்திக்கிறேன். பாகிஸ்தானில் ஜனநாயகம் தளைத்து, மதவாதம் ஒழியவேண்டும் என்பது இந்தியாவின் கனவு என்றார் சிங்.