ஜெ. சொத்து குவிப்பு வழக்கால் தமிழக அரசுக்கு ரூ. 110 கோடி செலவு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு விசாரணைகளுக்காக தமிழக அரசு இதுவரை ரூ. 110 கோடி செலவு செய்துள்ளது.இத் தகவலை ஜெயலலிதாவின் வழக்கறிஞரே தெரிவித்தார்.

வருமானத்தை மீறி சொத்துக்களை வாங்கிக் குவித்தது தொடர்பான இந்த வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளஇளவரசியை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பெங்களூர் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இளவரசியின் சார்பில் மனுவை தாக்கல் செய்த ஜெயலலிதாவின் வழக்கறிஞரும் அதிமுக எம்பியுமான ஜோதி இன்றுநீதிமன்றத்தில் ஆஜாராகி வாதாடினார். வழக்கு விசாரணை தினம்தோறும் நடப்பதால் ஞாயிற்றுக்கிழமையான இன்றும்விசாரணை நடந்தது.

அப்போது ஜோதி கூறுகையில்,

ஜெயலலிதாவை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் தான் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில்மூன்றாவது நபர் ஒருவரை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் தான் அரசுத் தரப்பு (ஜெயலலிதாவுக்கு எதிர் தரப்பு)செயல்படுகிறது.

இந்த சொத்துக் குவிப்பு விசாரணைகளுக்காக தமிழக அரசு இதுவரை ரூ. 110 கோடி செலவு செய்துள்ளது.

இந்த வழக்கை ஜெயலலிதா நினைத்திருந்தால் முதல்வரானவுடன் வாபஸ் பெற்றிருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை.காரணம் இது ஒரு பொய் வழக்கு. இந்த வழக்கில் விசாரணையை சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை என அவர் நினைத்தார்.இதுவரை 12க்கும் மேற்பட்ட வழக்குகளை சந்தித்து அவற்றில் வெற்றி கண்டுள்ளார் ஜெயலலிதா.

இளவரசி விஷயத்தில் அவருக்கு எதிராக இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் ஏற்கத்தக்கவையே அல்ல.அந்த ஆவணங்கள் அனைத்தும் ஜெராக்ஸ் காப்பிகள், அல்லது கையால் எழுதப்பட்டவை அல்லது டைப் செய்யப்பட்டவை.அவை சான்றிதழ் பெறப்பட்டவையோ அல்லது ஒரிஜினல் காப்பிகளோ அல்ல.

தங்களது வசதிப்படும்போது ஒரிஜினல் காப்பிகளையும் பிற நேரங்களில் ஜெராக்ஸ் காப்பிகளையும் அரசுத் தரப்புநீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறது. ஒரிஜினல் ஆவணங்களை சமர்பிப்பதில் அரசுத் தரப்புக்கு என்ன பயம்?.

ஜெயலலிதா மீதான இந்த வழக்கு போபார்ஸ் கேஸ் மாதிரித் தான். அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தூக்கி எறிந்தது.அது போலவே இந்த வழக்கும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் போடப்பட்டுள்ளது என்றார் ஜோதி.

இதையடுத்து விசாரணையை நாளைக்கு நீதிபதி பச்சேபுரே ஒத்தி வைத்தார். ஆனால், சில பணிகள் இருப்பதால் இதைசெவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்குமாறு ஜோதி கேட்டுக் கொண்டார். இதையடுத்து வழக்கு செவ்வாய்ககிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+