For Daily Alerts
Just In
15 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ்
சென்னை:
சென்னை நகரில் உள்ள 15 காவல் நிலையங்கள், காவல்துறை கட்டுப்பாட்டு அறை மற்றும் மத்திய குற்றப் பிரிவுஆகியவற்றிற்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் கிடைத்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை மாநகர காவல் துறைக்கு மட்டுமல்லாது தமிழக காவல்துறைக்கும்பெருமை சேர்ப்பதாக இது அமைந்துள்ளது.
இந்த தரச் சான்றிதழை பெறுவதற்காக பணியாற்றிய காவல்துறையினருக்கு எனது பாராட்டுக்கள்.
இந்த சான்றிதழ், தமிழக காவல்துறையினர் இன்னும் ஊக்கத்துடனும், உத்வேகத்துடனும் செயல்பட ஏதுவாக அமையும் என்றுஜெயலலிதா கூறியுள்ளார்.
Story first published: Friday, July 29, 2005, 5:30 [IST]