காவிரி: மத்திய குழு இன்று மேட்டூர் வருகை
மேட்டூர்:
கர்நாடக மாநில அணைகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய ஆய்வுக்குழு இன்று (சனிக்கிழமை) மேட்டூர்அணையை பார்வையிடுகிறது.
தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட வலியுறுத்தி திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களும், முதல்வர்ஜெயலலிதாவும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இதையடுத்து கர்நாடக, தமிழக அணைகளை பார்வையிட மத்தியகுழுவை அனுப்புவதாக பிரதமர் உறுதியளித்தார்.இதன்படி மத்திய நீர் ஆணைய உறுப்பினர் அஹூஜா, நீர்வளத்துறை அமைச்சக திட்ட அதிகாரி பரத்வாஜ், விவசாயத்துறைஅமைச்சக இணை செயலாளர் சம்சேர் சிங் ஆகியோர் நேற்று காலை பெங்களூர் வந்தனர்.
இவர்கள் பெங்களூரில் கர்நாடக நீர்ப்பாசனத் துறை செயலாளர் மகேஷ், காவிரி நீர்ப்பாசன கழக தலைவர் பரத்லால்,ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர் விதான் செளதாவில் தலைமை செயலாளர் மிஸ்ரா மற்றும் உயரதிகாரிகளுடன்மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
மத்திய குழுவினரிடம், கர்நாடக தலைமை செயலாளர் மிஸ்ரா கூறுகையில், கர்நாடகத்திலும், தமிழ்நாட்டிலும் தற்போது நல்லமழை பெய்து வருகிறது. கடந்த வருடம் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு 211 டிஎம்சி தண்ணீர் சென்றுள்ளது.
இந்த வருடம் இதுவரை 42.7 டிஎம்சி தண்ணீர் சென்றுள்ளது.இன்னும் 13.64 டிஎம்சி தண்ணீர் தான் கொடுக்க வேண்டியுள்ளது.ஆனால் தமிழகம் 18.19 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறது. இப்போது ஒரு நாளைக்கு 3.5 டிஎம்சி தண்ணீர்செல்கிறது.
இன்னும் 3 அல்லது 4 நாட்களில் கர்நாடகம் கொடுக்க வேண்டிய தண்ணீர் எல்லாம் போய் சேர்ந்து விடும் என்று கூறினார்.
பின்னர் மத்திய குழுவினர் கபினி, மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந் நிலையில்,இன்று (சனிக்கிழமை) மேட்டூர் அணையை பார்வையிட்டு, அணை நீர் வரத்து, இருப்பு மற்றும் பாசனத் தேவைகள் குறித்துஅதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர்.
இந்த ஆய்வறிக்கை திங்கட்கிழமை பிரதமரிடம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய குழுவினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications