விபத்தில் சிக்கிய ஓ.என்.ஜி.சியின் கப்பல் மூழ்கியது
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பை கடல் பகுதியில் இந்திய எண்ணெய் மற்றும் வாயு கழகத்தின் துரப்பன மேடை மீது மோதி பல்வேறு ஊழியர்கள்உயிரிழக்கக் காரணமாக அமைந்த சமுத்திர சுரக்ஷா என்ற கப்பல் கடலில் மூழ்கியது.
கடந்த மாதம் 27ம் தேதி கடும் மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கப்பல், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஆழ்கடல்எண்ணெய் துரப்பன மேடை மீது மோதியது. இதையடுத்து அந்த மேடையில் தீப்பிடித்தது.இதில் 12 ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் பலியாயினர். மேடையில் மோதிய கப்பலும் கடுமையாக சேதமடைந்தது. மேலும் அதிலும்தீ விபத்து ஏற்பட்டது.
இந் நிலையில் நேற்றிரவு அந்தக் கப்பல் ஆழ்கடல் பகுதியில் மூழ்கியது. கடும் காற்று காரணமாக அலைமோதிய அக் கப்பல்கரையில் இருந்து 8.5 கடல் மைல் தொலைவில் மூழ்கியது.












Click it and Unblock the Notifications