For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைமை செயலக முற்றுகை போராட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும், நீதிமன்ற ஆட்சி மொழியாகவும் அறிவிக்கக் கோரி தமிழ்பாதுகாப்பு இயக்கம் சார்பில் செப்டம்பர் 17ம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் எனதமிழ் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

இந்த இயக்கத்தின் முன்னணித் தலைவர்களான டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், டாக்டர் சேதுராமன் ஆகியோர் ஆலோசனைநடத்தினர். அதன் பின்னர் ராமதாஸ், திருமாவளவன், சேதுராமன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது திருமாவளவன் கூறுகையில், தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும், நீதிமன்றங்களில்அலுவல் மொழியாகவும் அறிவிக்கக் கோரி தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் செப்டம்பர் மாதம் 17ம் தேதி சென்னையில்மிகப் பெரும் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு நடத்தும் இந்தப் போராட்டத்தில் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களும்,ஏராளமான தமிழறிஞர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதே நாளன்று, ஏற்கனவே திட்டமிட்டபடி, வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள்முன்பும் இயக்கத்தினர் காலை முதல் மாலை வரை போராட்டம் நடத்துவர் என்றார் திருமாவளவன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X