சுதந்திர தின விழா: மன நலம் பாதித்த இளைஞரால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தலைமைச் செயலகம் எதிரே மரத்தின் மீது ஏறி, குதித்து விடப் போவதாக ஒரு இளைஞர் மிரட்டியதால், சுதந்திர தினவிழாவுக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை எதிரே சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஏராளமானபொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர்.அப்போது ஒரு வாலிபர் கோட்டைக்கு எதிரே உள்ள மரத்தின் மீது திடீரென ஏறினார். உச்சிக்கு சென்ற அவர் அங்கிருந்து கீழேகுதிக்கப் போவதாக மிரட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோட்டை காவல் நிலைய போலீஸார் அங்கு விரைந்து வந்து, வாலிபரை கீழே இறங்குமாறு கூறினர்.
சிறிது நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அந்த நபர் கீழே இறங்கி வந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்திருச்சியைச் சேர்ந்தவர் என்றும் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications