தமிழக ஆளுநராக மூத்த காங். தலைவர் நியமனம்?
சென்னை:
தமிழக ஆளுநர் பதவியிலிருந்து எஸ்.எஸ்.பர்னாலா ஓய்வு பெற்ற பிறகு, மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவரை அப் பதவியில்நியமிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக ஆளுநராக இரண்டாவது முறையாக பதவி வகித்து வரும் பர்னாலா வரும் நவம்பர் மாதம் 2ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். இப்பதவியில் தொடர்ந்து நீடிக்க அவருக்கு விருப்பம் இல்லை. பஞ்சாப் திரும்பி தீவிர அரசியலில் ஈடுபட அவர்முடிவு செய்துள்ளார்.இதையடுத்து புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டுதொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு புதிய ஆளுநரைத் தேர்வு செய்ய மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் என்.டி.திவாரி, எம்.எல். பொதேதார் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் இந்தப்பதவிக்கு அடிபடுகிறது. என்.டி. திவாரி தற்போது உத்தராஞ்சல் மாநில முதல்வராக இருக்கிறார்.
தனது வயதைக் காரணம் காட்டி முதல்வர் பதவியில் இருந்து விலக அவர் கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக இருந்தால், அது தேர்தலில் திமுக கூட்டணிக்குச் சாதகமாக இருக்கும் என்றுகாங்கிரஸ் தலைமை நம்புகிறது. மேலும் ஜெயலலிதாவுக்கு ஈடு கொடுக்க ஆளுநர் பதவியில் அரசியல் செய்யும் ஒரு நபர்இருப்பது நல்லது என்றும் காங்கிரஸ் கட்சி கருதுகிறது.