இந்திய கடன்: கலாமுக்கு பணம் அனுப்பிய வாலிபர்
சென்னை:
சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இந்தியாவின் கடனைத் தீர்ப்பதற்காக தன் பங்குக்கு ரூ. 3000க்கான காசோலையைஅனுப்பினார். இந்த காசோலையை தமிழக அரசுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பி வைத்தது.
இதையடுத்து மாநில அரசு அதிகாரிகள், அந்த இளைஞரை வரவழைத்து காசோலையை அவரிடமே திருப்பிக் கொடுத்தனர்.சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் (பெயர் குறிப்பிடப்படவில்லை) இந்தியாவின் கடன் தொகையை அறிந்துமலைத்துப் போனார். ஒவ்வொரு இந்தியரும் தலா ரூ. 3,000 செலுத்தினால் இந்தியாவின் கடன் தொகையை மொத்தமாகஅடைத்து விடலாம் என்பதை அறிந்த அவர் உடனடியாக ரூ. 3,000க்கு வங்கியில் காசோலையை (டிமாண்ட் டிராப்ட்) எடுத்தார்.
இந்த காசோலையை குடியரசுத் தலைவர் அப்துல் கலாக்கு அனுப்பி வைத்தார். அத்துடன் ஒரு கடிதத்தையும் இணைத்தார்.அதில், இந்தியாவின் கடன் சுமைக்கு எனது பங்கை அனுப்பி வைத்துள்ளேன். இதை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுமாறும்கோரியிருந்தார்.
இந்தக் காசோலை கிடைக்கப் பெற்ற குடியரசுத் தலைவர் மாளிகை உடனடியாக அதை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது.காசோலையை சம்பந்தப்பட்ட நபரிடம் திருப்பிக் கொடுத்து விடுமாறு குடியரசுத் தலைவர் மாளிகை கேட்டுக்கொண்டது.
இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இளைஞரை வரவழைத்து அவரிடம் காசோலையை திருப்பிக்கொடுத்தனர்.
காசோலை திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது என்பதற்கான ஒரு அறிக்கையையும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தமிழகஅரசு அனுப்பி வைத்துள்ளது.
இந்தியாவின் கடனைத் தீர்க்க ரூ. 3,000 அனுப்பிய இளைஞரின் மாத சம்பளம் ரூ. 8,000 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், இந்தியாவின் கடனைத் தீர்க்க வேண்டும் என்ற ஆவலால் தனது சக்தியையும் மீறி பணத்தை அனுப்பிவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications