For Quick Alerts
For Daily Alerts
Just In
மேட்டூர் அணையில் நீர் கசிவு: அணைக்கு ஆபத்து?
மேட்டூர்:
மேட்டூர் அணையில் நீர்க் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள்ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
மேட்டூர் அணையில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு துளைகள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாகத்தான் காற்றுவெளியாகி, அணையின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கப்படுகிறது.இந்தத் துளைகள் வழியாக நீரும் கசியும். இந்த நீர்க் கசிவின் அளவை வைத்தே, அணையின் ஸ்திரத்தன்மை நிர்ணயிக்கப்படும்.தற்போது இந்த துளைகளின் வழியாக வழக்கத்தை விட அதிக அளவில் நீர் வெளியாகி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அணையின் உறுதித் தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தக் கசிவு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நீர்க கசிவுகாரணமாக அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று முதல் கட்ட ஆய்வுக்குப் பின்னர் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, May 18, 2005, 5:30 [IST]