ஷேம் ஷேம்,பப்ளிக் ஷேம்! ராதாரவி புலம்பல்!!
சென்னை:
![]() |
மக்கள் குறைகளை கேட்பதற்காக இ-மெயில் முகவரியை தொகுதி முழுக்க எழுதி வைத்தேன். ஆனால் குறைகளைக் கூறுவதைவிட்டு விட்டு, என்ன படத்தில் நடிக்கிறீர்கள், ரஜினியின் அடுத்த படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டுத்தான் முக்கால்வாசிப் பேர்மெயில் அனுப்புகின்றனர். இதை நினைத்தாலே அவமானமாக இருக்கிறது என்று நடிகரும், சைதாப்பேட்டை அதிமுகஎம்.எல்.ஏவுமான ராதாரவி வெறுத்துப் போய் கூறினார்.
திமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட சைதாப்பேட்டையில் யாருமே எதிர்பாராத அளவுக்கு அதிமுக சார்பாலி அட்டகாசமாகவெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றார் ராதாரவி.
வெற்றி பெற்ற பிறகு தொகுதி மக்களை சந்திக்காமல் எஸ்கேப் ஆகும் எம்.எல்.ஏக்களுக்கு மத்தியில் அடிக்கடி தொகுதிப் பக்கம்விசிட் அடித்து குறைகளைக் கேட்பது, தொகுதியில் பல்வேறு கட்டடங்களைத் திறந்து வைப்பது, அப்படியே படங்களிலும்நடிப்பது, அதிமுக பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு அனல் பறக்கப் பேசுவது என படு பிசியாக இருந்து வருகிறார்ராதாரவி.
தொகுதியில் உள்ள படித்த வாக்காளர்கள் பலர் தங்களது குறைகளை நேரில் வந்து கூற முன் வருவதில்லை என்பதை உணர்ந்தஅவர், படித்த மக்களின் வசதிக்காக தனது இ-மெயில் முகவரியை தொகுதி முழுக்க எழுதி வைத்தார். இதன் மூலம் மாடர்ன்எம்.எல்.ஏவாகவும் மாறினார்.
தொகுதி குறித்த அனைத்து விவரங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துக் கொண்டு, குறைகளை பட்டியலிட்டுவைத்து படிப்படியாக அவற்றை நிவர்த்தி செய்து வருகிறார். இ-மெயில் மூலம் ஏகப்பட்ட புகார்கள் குவியும் என்றுஎதிர்பார்த்துக் காத்திருந்தவருக்கு பெரும் அதிர்ச்சிதான் காத்திருந்தது.
குறைகளுக்குப் பதில் சினிமா சம்பந்தமாகவே மெயில்கள் வந்தவண்ணம் இருப்பதால் வெறுத்துப் போய் இருக்கிறார் ராதாரவி.அவர் கூறுகையில்,
தமிழக எம்.எல்.ஏக்களிலேயே, கம்ப்யூட்டர் மூலம் மக்கள் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்வது நான் மட்டுமே. தினமும்இ-மெயில் மூலம் வரும் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி அதை நிவர்த்தி செய்து வருகிறேன்.வாக்காளர்களுக்கும் அதுகுறித்து தெரிவிக்கிறேன். ஆனால் கடந்த 8 மாத காலத்தில் இதுவரை குறைகளைக் கூறி வந்தமெயில்களின் எண்ணிக்கை ரொம்பவும் குறைவு. மாறாக சினிமா சம்பந்தமாகவே கேள்விகள் வருகின்றன.
நீங்கள் எந்தப் படத்தில் நடிக்கிறீர்கள், சந்திரமுகி படத்தில் நடிக்கலையே ஏன், அடுத்த படம் என்ன, உங்கள் பட ஹீரோ யார்என்றரீதியில்தான் கேள்விகள் வருகின்றன. இதனால் நான் வெறுத்துப் போய் விட்டேன்.
மக்கள் குறைகளை எம்.எல்.ஏக்கள் உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் எம்.எல்.ஏக்களுக்குமுதல்வர் ஜெயலலிதா கம்ப்யூட்டர் வசதி செய்து கொடுத்தார். ஆனால் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதற்கான சரியானவிழிப்புணர்ச்சி மக்களிடையே இல்லை.
சினிமா சம்பந்தமாகவே மக்கள் என்னிடம் கேள்வி கேட்டு மெயில் அனுப்பி வருவது மிகவும் அவமானமாக இருக்கிறது.படித்தவர்களே இப்படி மெயில் அனுப்புவது எனக்கு வருத்தமாக உள்ளது என்று புலம்பித் தள்ளுகிறார் ராதாரவி.













Click it and Unblock the Notifications