ஐடியலின் கூட்டாளிகளிடம் திண்டுக்கல்லில் தீவிர விசாரணை
திண்டுக்கல்:
மோசடி மன்னன் ஐடியல் சுப்பிரமணியத்தின் பணம் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அவரது கூட்டாளிகள்இருவரிடமும் திண்டுக்கல்லில் வைத்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மோசடி மன்னன் ஐடியல் சுப்ரமணியனை சமீபத்தில் விராலிபட்டி, வத்தலகுண்டு, கொடைக்கானல் ஆகிய ஊர்களுக்குஅழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது ஐடியலுக்கு எதிராக பல ஆதாரங்களையும்போலீஸார் சேகரித்தனர்.இந் நிலையில் கைதாகியுள்ள ஐடியலின் கூட்டாளிகளான செளந்தர் மற்றும் மணிகண்டன் ஆகியோரை நேற்று முன்தினம்போலீஸார் தங்களது காவலில் எடுத்தனர். பின்னர் அவர்களை விராலிப்பட்டி, வத்தலகுண்டு ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இன்று காலை திண்டுக்கல்லுக்கு இருவரையும் அழைத்து வந்த போலீஸார், அங்குள்ள பத்திரப் பதிவு அலுவலகம், வட்டாரப்போக்குவரத்து அலுவலகம், ஒரு கம்ப்யூட்டர் மையம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
ஐடியலின் பண விவகாரம் குறித்து இந்த இருவருக்கும் முழுமையாகத் தெரியும் என போலீஸ் தரப்பு நம்புகிறது.
ஐடியலின் பணம் எங்கே முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறியவே இவர்களிடம் போலீஸார் தீவிரவிசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications