சிவகாசி அருகே பயங்கர பட்டாசு விபத்து: 300 பேர் உயிர் தப்பினர்!
Subscribe to Oneindia Tamil
சிவகாசி:
சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது. உணவு இடைவேளை என்பதால்300 தொழிலாளர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தீபாவளிக்கான பட்டாசுத் தயாரிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பட்டாசுத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.விஜயரங்கபுரம் என்ற கிராமத்தில், கேசவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலை உள்ளது. இங்கு300 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் 48 அறைகளில் இருப்பு வைக்கப்பட்டுவருகின்றன.
இந்தத் தொழிற்சாலையில் இன்று பிற்பகலில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் 10 அறைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் அந்தக்கட்டடமே இடிந்து விழுந்தது.
வெடிச் சத்தம் பல கி.மீ. தொலைவுக்கு கேட்டது. நல்ல வேளையாக, ஊழியர்கள் அனைவரும் உணவுஇடைவேளையில் சாப்பிடச் சென்றிருந்ததால் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications