மலேசியா: தமிழ் தொழிலதிபரை ஏமாற்றிய 2 இந்தியர்களுக்கு பிரம்படி, சிறை
கோலாலம்பூர்:
மலேசியாவில் தமிழ்த் தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றிய இரு இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு பிரம்படி தண்டனைவழங்கவும், 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜீவகுமார். இவர் தனது புதிய தொழிற்சாலைக்கு இந்தியாவில் இருந்து தொழிலாளர்களைஅழைத்து வரத் திட்டமிட்டார்.இதற்காக 38 இந்தியத் தொழிலாளர்களுக்கு வேலைக்கான பெர்மிட் மற்றும் விசா வாங்கும் முயற்சிகளில் இறங்கினார்.
இதைத் தெரிந்து கொண்ட ஆந்திராவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர்களான கோடபடி வினோத், சைதன்ய தம்மலபடிஆகியோர் தொழிலாளர்களுக்கு வொர்க் பெர்மிட் வாங்கித் தர தாங்கள் உதவுவதாகத் தெரிவித்தனர்.
இருவரும் மலேசியாவில் பணியாற்றி வருபவர்கள் என்பதால், அவர்களை நம்பினார் ஜீவகுமார்.
ஆனால், இந்த இருவரும் போலியான பெர்மிட்களைத் தயாரித்து அதை ஜீவகுமாரிடம் காட்டி ரூ. 5 லட்சம் பணம் வாங்கினர்.மேலும் சில வங்கிகளின் பெயரில் போலி ஆவணங்களையும் தயாரித்து ஜீவகுமாரிடம் தந்தனர்.
ஜீவகுமாருக்கு அவை போலியானவை என்று தாமதமாகத் தான் தெரிய வந்தது. இதையடுத்து இருவர் மீதும் போலீசில் புகார்தந்தார்.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி, இந்த இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிரம்படிகளும் தர உத்தரவிட்டார்.