இலங்கை: சுடர் ஒளி அலுவலகம் மீது குண்டு வீச்சு- ஒருவர் பலி, 3 பேர் காயம்
கொழும்பு:
இலங்கையில் சுடர் ஒளி தமிழ் நாளிதழின் அலுவலகத்தில் கிரனைட் குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஒருவர் பலியானார்.மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று மாலை இச் சம்பவம் நடந்தது. கொழும்பு கிராண்ட்பாசில் உள்ள மடம்பிதியா சாலையில் சுடர் ஒளி நாளிதழின் அச்சகம்உள்ளது. இதன் மீது ஒரு கும்பல் இரண்டு கிரனைட் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியோடியது.இந்த குண்டுகள் வெடித்துச் சிதறியதில் அலுவலகத்தின் காவலாளியான டேவிட் செல்வரத்னம் (50) படுகாயமடைந்தார்.உடனடியாக மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த குண்டு வீச்சில் மாணிக்கம் கமலநாதன் என்ற புரூப் ரீடரும், கம்ப்யூட்டர் ஆபரேட்டரான சுப்பிரமணியம் சுதாஸ் மற்றும்தீபம் தொலைக்காட்சியின் ஊழியரான அனஸ் ஆகியோரும் காயமடைந்தனர்.
அதே நேரத்தில் அலுவலகத்தில் இருந்த செய்தி ஆசிரியர்கள், நிருபர்கள் காயமின்றி தப்பிவிட்டனர். இந்த குண்டுவெடிப்பில்சுடர் ஒளி அலுவலக கட்டடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஒரு வேன், காரும் சேதமடைந்தன.
குண்டுகளை வீசியவர்கள் ஒரு வெள்ளை நிற வேனில் வந்ததாகவும், மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் முரண்பட்டதகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு வாரங்களுக்கு முன் வெல்லவத்தையில் உள்ள சுடர் ஒளி துணை அலுவலகம் மீது ஒரு நபர் இரண்டு கிரனைட் குண்டுகளைவீசியது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவை வெடிக்காமல் போனதால் சேதம் ஏற்படவில்லை.
சமீபத்தில் இந்தப் பத்திரிக்கையின் புகைப்படக் கலைஞரான யதுர்சன் பிரேமச்சந்திரனை ஜனதா விமுக்தி பெரமுனா சிங்களகட்சியைச் சேர்ந்த கும்பல் கடுமையாகத் தாக்கியதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications