கோலாலம்பூர்-லண்டன் விமானத்தில் பெண்ணுக்கு பிரசவ வலி: சென்னையில் குழந்தை பிறந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மலேசிய விமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு நடுவானில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து விமானம் சென்னையில்தரையிறக்கப்பட்டு, அப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது.

மலேசியாவைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி கலைவாணி. நிறைமாத கர்ப்பிணியான கலைவாணி, தனதுகணவருடன் கோலாலம்பூரில் இருந்து லண்டனுக்குப் பயணமானார்.

அவர் பயணம் செய்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு அருகே இந்தியப் பெருங்கடலுக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது, கலைவாணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து விமானி சென்னையில் விமானத்தை தரையிறக்க அனுமதி கோரினார்.

மனிதாபிமான அடிப்படையில் விமானம் தரையிறங்க அதிகாரிகள் உடனடியாக அனுமதி கொடுத்தனர். மேலும் ஆம்புலன்சும்,மருத்துவக் குழுவினரும் தயார் செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மலேசிய விமானம் சென்னையில் தரையிறங்கியது.

விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவர் குழுவினர் கலைவாணியை விமானத்திலிருந்து வெளியே கொண்டு வந்துஆம்புலன்ஸில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது.

கலைவாணி மற்றும் அவரது கணவரை சென்னை விமான நிலையத்தில் இறக்கி விட்ட பின்னர் மலேசிய விமானம் லண்டன்புறப்பட்டுச் சென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+