ஆசிரியர் தினம்: பர்னாலா, ஜெ. வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தினம் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமே, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி ஆளுநர் பர்னாலா விடுத்துள்ள அறிக்கையில், சமுதாய வளர்ச்சிக்கும், இளைய சமுதாயத்தினரை சிறந்தகுடிமக்களாக உருவாக்குவதிலும் ஆசிரியர்களின் பணி மகத்தானது. அறிவு வளர்ச்சிக்கு கல்வியே சிறந்த ஆதாரமாக திகழ்கிறது.

சிறந்த குடிமக்களாக மாணவர்களை மாற்றும் அரிய பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றுகூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில், கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதே தமிழக மக்களின்ஆண்டாண்டு கால சிந்தனை. அவ்வாறு சென்ற இடமெல்லாம் சிறப்பளிக்கும் கல்வியை, எந்தவிதத்திலாவது பெற வேண்டும்என்பது நம் நாட்டின் புலவர் பெருமக்களின் அறிவுரையாக இருந்து வருகிறது.

கல்லாதவர்களே தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதே எனது கோட்பாடகாவும், அதிமுக அரசின் குறிக்கோளாகவும்அமைந்துள்ளது. பயிற்றுப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் என்ற பாரதியின் கனவை நனவாக்கி வருகிறதுஎனது அரசு.

தத்துவஞானி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமாகிய செப்டம்பர் 5ம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் இந்தநேரத்தில், சிறக்கட்டம் ஆசிரியப் பெருமக்கள் வாழ்வு, செழிக்கட்டும் தமிழகக் கல்வி என்று வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+