ஆடைக் கட்டுப்பாடு அர்த்தமற்றது: மாதர் சங்கம் கருத்து
சென்னை:
பொறியியல் கல்லூரிகளில் மாணவிகள் குறிப்பிட்ட ஆடை அணிந்துதான் வர வேண்டும் என்று கூறுவது அர்த்தமற்றது, தேவையில்லாததுஎன்று இந்திய ஜனநாயக மாதர்ச ங்க பொதுச் செயலாளர் வாசுகி கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசுகையில், பெண்கள் எதிர்கொள்லும் பாலியல் துன்பங்களுக்கும், அவர்கள்அணிந்து வரும் ஆடைகளுக்கும் தொடர்பே இல்லை. உண்மையில், சமூகத்தில் அவர்கள் தாழ்மையான நிலையில் இருப்பதே முக்கியக்காரணம்.அண்ணா பல்கலைக்கழகம் பெண்கள் ஆடை அணிவது தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தவறானது,தேவையில்லாதது, அர்த்தமற்றது. மாணவிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதை விட, மாணவ, மாணவிகள் ஆரோக்கியமான முறையில்பழகுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்.
இதற்காக பெண்ணியம் உள்ளிட்ட பெண்கள் தொடர்பான பல பாடப் பிரிவுகளை பாடத்திட்டத்தில் சேர்க்கலாம். அதேபோலசெல்போன்களுக்கும் தடை விதித்துள்ளார்கள். இதுவும் தேவையற்றது. பல மாணவ, மாணவியர் வீட்டை விட்டு வெகு தொலைவிலிருந்துவந்து படிக்கிறார்கள். அவசரமான சூழ்நிலையில், தகவல் பரிமாற்றத்துக்கு செல்போன் அவசியம்.
வகுப்பறைகளில், நூலகங்களில் வேண்டுமானால் அதை தடை செய்யலாம். மாறாக செல்போனையே கொண்டு வரக் கூடாது என்பதுதேவையற்றது என்றார் வாசுகி.
இந்த நிகழ்ச்சியில் கவிஞர் கனிமொழி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications