நிருபரை திட்டிய ஸ்டாலின் மன்னிப்பு கேட்க கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நக்கீரன் நிருபரை திட்டியதாக மு.க.ஸடாலின் மீது பத்திரிக்கையாளர்கள் புகார் கூறியுள்ளனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்அவர்கள் கோரியுள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் திமுக சார்பில் மகளிர் இட ஒதுக்கீடுகோரி வியாழக்கிழமை மாலை பெண்கள் கலந்து கொண்ட பேரணி நடந்தது. இதை திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்து தனிமேடையில் அமர்ந்து பார்வையிட்டார்.இந்த நிகழ்ச்சியை சேகரிப்பதற்காக பத்திரிக்கையாளர்கள் ஏராளமான பேர் குழுமியிருந்தனர். அப்போது நக்கீரன் நிருபர் அன்பழகனிடம்வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் அவரைப் பார்த்து ஆவேசமடைந்தார். ஒருமையில் அவரைத் திட்டி அங்கிருந்துவெளியேற்றுமாறு திமுக தொண்டர்களிடம் கோபமாக கூறினார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக செய்தியாளர்கள், அவர் பத்திரிக்கை நிருபர் என்று கூறியும் கேட்காமல் தொடர்ந்து அவதூறாகப்பேசினார். ஸ்டாலினின் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. அவர் பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications