For Daily Alerts
Just In
விஜயகாந்த் தேற மாட்டார்: அன்புமணியின் ஆரூடம்!
புதுடெல்லி:
ரசிகர்களை நம்பி கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜயகாந்த் அரசியலில் தேற மாட்டார். இன்னொரு எம்.ஜி.ஆர். உருவாகமுடியாது என்று மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
டெல்லியில் அவர் இதுகுறித்துக் கூறுகையில், 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது தேரத்ல் அலை இருந்தது.ஆனால் இப்போது அப்படி இல்லை. ரசிகர்களை நம்பி கட்சி ஆரம்பித்துள்ளார் விஜயகாந்த். அது எடுபடாது, அவரும் தேறமாட்டார்.
விஜயகாந்த்தின் புதிய கட்சியால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. எங்களது அணியில் விஜயகாந்த் சேர விரும்பினால், தேர்தல்நேரத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றார் அவர்.
Comments
Story first published: Saturday, September 17, 2005, 5:30 [IST]