டி.வி செய்தியால் மனமுடைந்த பெண் தற்கொலை!
சென்னை:
கல்லீரல் நோய் சம்பந்தமாக தனியார் தொலைக்காட்சியில் வந்த செய்தியைக் கேட்டு மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.
குஜராத் மாநிலம் பரோடாவைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத். இவர் குஜராத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹேமாம்பிகா(வயது 35). ரவீந்திரநாத்துக்கு கல்லீரலில் பிரச்சினை உள்ளது. இதற்காக சென்னை வந்து அப்பல்லோ மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகிறார்.சிட்லபாக்கம் ராகவேந்திர அவென்யூவில் உள்ள நண்பர் ராமச்சந்திரனின் வீட்டில் ரவீந்திரநாத் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகிறார். ஹேமாம்பிகாவும் உடன் வந்துள்ளார். இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியில் கல்லீரல் நோய் சம்பந்தமாகடாக்டர் ஒருவர் விளக்கம் அளித்தார். அந்த நிகழ்ச்சியை ஹேமாம்பிகா ஆர்வத்துடன் பார்த்தார்.
அப்போது கல்லீரல் நோய்க்கு மருந்து கிடையாது என்று டாக்டர் கூறியதைக் கேட்டதும் ஹேமாம்பிகா மனம் உடைந்தார்.அப்படியென்றால் தனது கணவரைக் குணப்படுத்த முடியாது என்று நினைத்த அவர் அந்த வருத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பாக சிட்லபாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒரு பெண்ணின் தற்கொலைக்குக் காரணமானசெய்தியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி, அவரது சாவுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று போலீஸார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications