கண்ணப்பன் சொத்து குவிப்பு வழக்கு: நவ. 18க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜ.கண்ணப்பன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை நவம்பர் 18ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.
முந்தைய ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் முக்கியப் பொறுப்புகள் பலவற்றை வகித்தவர் ராஜ. கண்ணப்பன். அந்த சமயத்தில்அளவுக்கு மீறி சொத்து சேர்த்ததாக கூறி கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ராஜ. கண்ணப்பன், அவரது மனைவி நளாயினி, தம்பிசெந்தாமரை, அவரது மனைவி செல்லம்மாள் உள்பட 20 பேர் மீது தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இன்று அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நீதிமன்றம் கூடியபோது கண்ணப்பன், அவரது மனைவி ஆகியோர்வரவில்லை. 6 பேர் மட்டுமே வந்திருந்தனர்.
இதையடுத்து நவம்பர் 18ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் கண்டிப்பாக அனைவரும் நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications