ஆக்ரா சிறையில் பெரும் கலவரம்: ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
ஆக்ரா:
ஆக்ரா சிறைச்சாலையில் மிகப் பெரும் கலவரம் நடந்தது. கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த பெரும் மோதலில் பலர்காயமடைந்தனர்.சிறையில் ஒரு கைதி தற்கொலை செய்து கொண்டதையடுத்து கைதிகள் கலவரத்தில் இறங்கினர். போலீசார் மீது அவர்கள் பெரும்தாக்குதலில் ஈடுபட்டனர். கல் வீச்சு, அடிதடியில் பல போலீசார் காயமடைந்தனர்.
சிறைச்சாலையின் சமையல் அறை மற்றும் மருத்துவமனைக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்பலர் காயமடைந்தனர்.
இந்த மோதல் நடந்து கொண்டிருந்தபோது சிறையில் இருந்த கைதி ஒருவர் பலியானார். அவரை போலீசார் அடித்துக் கொன்றதாக கைதிகள்குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications