For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்கள், தபால் நிலையங்கள், சிறையை தகர்ப்போம்: அல்-உம்மா மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

பாளையங்கோட்டை மத்திய சிறையை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வேன் மூலம் மோதித் தகர்ப்போம் என அல்-உம்மாமிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்காசி ரயில் நிலைய மேலாளர் ராமகிருஷ்ணனுக்கு இது தொடர்பாக ஒரு கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தைகேரளாவைச் சேர்ந்த அல்-உம்மா அமைப்பினர் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் பல்வேறு மிரட்டல்களை விடுத்துள்ளனர்.

கடிதம் கிடைத்த 35 நாட்களுக்குள், தென்காசி வழியாக கேரளாவுக்கு செல்லும் ரயில்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்போகிறோம். அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் ஆகியவற்றை தபால் வெடிகுண்டு மூலம் தகர்ப்போம்.

மதானியின் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் ஊடுறுவியுள்ளனர். விடிய விடிய ரயில் தண்டவாளங்களைப்பாதுகாத்தாலும் அவற்றை வெடி வைத்துத் தகர்ப்போம். இதற்காக ஆந்திராவிலிருந்து நக்சலைட்டுகள் வந்துள்ளனர்.

பாளையங்கோட்டை சிறைச் சாலையை, வெடிகுண்டு நிரப்பப்பட்ட வேன் மூலம் மோதி தகர்ப்போம். எத்தனை போலீஸார்பாதுகாப்புக்காக வந்தாலும் இதைத் தடுக்க முடியாது என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

இக்கடிதம் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரண முடுக்கி விடப்பட்டுள்ளது. பாளை சிறைக்கும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் கேரள அல் உம்மா என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இக்கடிதம் திருப்பூரிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகபோலீஸார் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X